பூக்கள் பூக்கும் தருணம் 2
உங்கள் கருத்துக்களை பிடித்திருந்தால் இதில் கொட்டலாம் இல்லையென்றால் காரி துப்பலாம்.
[email protected]
பூக்கள் பூக்கும் தருணம்
ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க இது எனக்குள் பூக்கள் பூத்த தருணம் இரண்டாவது பாகம் முடிஞ்சா உங்களுக்கு நேரம் இருந்தா முதல் பாகம் படிச்சு பாருங்க சரி வாங்க கதைக்கு போலாம்
அன்னிக்கு நானும் என் நண்பனும் இவங்களோட ஏரியா எங்க இருக்குனு தெரிஞ்சிக்கணும்னு நெனச்சோம் அதனால அவங்க ஆபீஸ் விட்டு வர வரைக்கும் வெளிய எங்கயாவது சுத்தலாம்னு முடிவு பண்ணி அங்க பக்கத்தில இருந்த பீச் போனோம் ஆனா எனக்கு என் மனசு முழுக்க அவங்க ஞாபகம் தான் அவங்க மழைல விளையாடுனது அவங்களோட அந்த அழகான மை வச்ச கண்ணு இதே தான் என் மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு எப்ப டா நேரம் ஆகும் எப்ப அவங்கள பாப்போம்னு இருந்தேன் அன்னிக்கு சாயங்காலம் வரைக்கும் பீச்லேயே பொழுது போக்கினோம்
அப்பறம் சாயங்காலம் நேரம் ஆனதும் மறுபடியும் அதே மாதிரி அவங்க ஆபீஸ் எதிர்ல இருந்த டீ கடைல காத்துட்டு இருந்தோம் கிட்டத்தட்ட ஒன்றைமணி நேரமா அங்கேயே இருந்தோம் அப்போ ஒரு நொடி என் உடம்புக்குள்ள ஒரு உணர்வு தோணுச்சு டக்குனு பாத்தேன் ஆனா அங்க யாரையும் காணும் அதான நம்ம பெரிய ரிஷி யோகி கிடையாது உள்ளுணர்வு இந்த அளவுக்கு வேல செய்யனு சொல்லி சிரிச்சிட்டு காத்துட்டு இருந்தேன் சரியா ஒரு பத்து நிமிஷம் அப்பறம் அவங்க வண்டில வெளிய வரத பாத்தேன் உடனே என் நண்பன் குடிச்சிட்டு இருந்த டீ கப் வாங்கி டீ கீழ ஊத்தி விட்டேன் அவங்க வந்துட்டாங்க வா போலாம்னு சொல்லி இவன இழுத்துட்டு கெளம்புனேன் அவங்க வண்டி ஒட்டி வேகமா போய்ட்டு இருக்க நாங்க பின்னாடியே வண்டில தொடர்ந்துட்டே போய்ட்டு இருந்தோம்
கிட்டத்தட்ட ஒரு இருபது நிமிஷம் அவங்க பின்னாடியே போயிருப்போம் ஒரு இடத்துல ஒரு ஆர்ச் மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள போனாங்க வெளிய காவலுக்கு ஒரு போலீஸ் வேற நின்னுட்டு இருந்தாங்க என்ன டா இடம் இதுனு மேல அந்த ஆர்ச்ல எழுதிருக்கிறத படிச்சு பாத்தா அது காவலர் குடியிருப்பு பகுதின்னு போட்ருந்துச்சு உடனே எங்க முகத்தில ஒரு நொடி வேர்த்து கொட்டிடுச்சு ரைட்டு ஆனா இருந்தாலும் அவங்கள ஒரு நிமிஷம் என் மனசுக்குள்ள நெனச்சு பாத்தேன் அவங்களோட அழகான அந்த கண்ணு என் மனசுக்குள்ள ஒரு ஒளி வீசிட்டு போக பரவால்ல உள்ள போ பத்துக்கலாம்னு என் நண்பன் கிட்ட சொல்லி உள்ள போனோம் உள்ள போனா எங்க பாத்தாலும் போலீஸ் தான் எல்லா இடத்துலயும் காக்கி துணியா தெரிய உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் வேற எந்த பக்கமும் பாக்காம அவங்களையே பாத்துட்டு போய்ட்டு இருந்தேன் அப்போ ஒரு வழியா ஒரு வீடு வாசல்ல போய் வண்டி நிறுத்துனாங்க
நாங்களும் வண்டிய கொஞ்சம் தூரமா நிறுத்திட்டு அவங்கள பாத்துட்டு இருந்தேன் அவங்க வண்டிக்கு பக்கத்துல நின்னு அவங்க முகத்துல போட்ருந்த அந்த துணிய கொஞ்சம் கொஞ்சமா மெதுவா எடுத்துட்டு இருந்தாங்க அவங்க முகத்தை முதல் தடவ பாக்க போறேன் இன்னும் கொஞ்சம் கொஞ்சமா வண்டிய நகத்தி பக்கத்தில போய் பாக்கலாம்னு முயற்சி பண்ணேன் அவங்க முகத்துணியை கழட்டி அவங்க முகத்தை பாக்க நினைக்கும் போது முதுகுல யாரோட கையோ பட்டுச்சு யாருடா இது இந்த நேரத்துலன்னு திரும்பி பாத்தா ஒரு போலீஸ்காரர் யாருடா நீங்க இங்க என்ன பண்றீங்கன்னு கேட்டாரு நாங்க அப்படியே வண்டில இருந்து எந்திரிச்சி நின்னு இல்ல சார் சும்மா ரவுண்டு வந்தோம்னு சொல்ல இங்க எல்லாம் உள்ள வர கூடாது கெளம்புன்னு அவர் மிரட்ட சரிங்க சார்னு சொல்லிட்டு அங்க இருந்து கெளம்புற மாதிரி அப்படியே அவங்கல பாத்தேன் ஆனா அவங்கள காணும் வீடு உள்ள போய்ட்டாங்க போல ஆசையா அவங்க முகத்தை பாக்கலாம்னு நெனச்சேன் அதுல வந்து மன்ன போதுதான் படுபாவினு என் நண்பன் கிட்ட திட்டிட்டே அங்க இருந்து கிளம்ப வண்டிய திருப்புனோம் உடனே ஹான் தோ போய்ட்டு வந்துடறேன்மானு ஒரு குரல் அவங்க தான் அவங்க வீட்ல இருந்து வெளிய வர அவங்க முகத்தை பாத்தேன் நிஜமா இது வரைக்கும் எவ்ளவோ அழகிய பாத்துருக்கேன் ஆனா இவளை மாதிரி ஒரு பேரழகியை என் வாழ்க்கைல பாத்தது இது தான் முதல் தடவ அவங்க உதடு குழந்தைங்களுக்கு இருக்குற மாதிரி அவ்ளோ சின்னதா அழகான வடிவத்துல இருந்துது அவங்க வண்டி எடுக்கும் போது ஒரு பார்வை என் மேல பட்டுச்சு அப்படியே நொறுங்கி போனேன் வண்டில எங்க பக்கமா வந்தாங்க டக்குனு வண்டிய எங்க பக்கத்தில நிறுத்தி எங்களை பாத்து டேய் என்ன பின்னாடியே வந்துட்டு இருக்கீங்க என் அப்பா யாரு தெரியுமா போலீஸ்னு சொன்னாங்க உடனே நாங்க ஹா ஹா ஹா பின்ன போலீஸ் குவோட்டர்ஸ் உள்ள டாக்டர்ரா இருப்பாங்கன்னு சொல்லி சிரிக்க உடனே அவங்க முகம் கோவமா மாறி டேய் இனிமே உங்கள இந்த பக்கம் பாத்தேன் போலீஸ் காம்ப்ளயின் பண்ணிடுவேன்னு சொன்னாங்க உடனே என் நண்பன் வண்டி எடுத்து கிளம்பலாம்டானு சொல்ல அங்க இருந்து கெளம்புனோம்
என் நண்பன் கேட்டான் ஏண்டா பொண்ண லவ் பண்ணிருக்கனு பாத்தா என்னடா பேய்ய லவ் பண்ணிருக்க அவ என்ன டா இந்த கத்து கத்து கத்துறா அடுத்த தடவை நான் கத்துறேன் பாரு அவ எனக்கு பண்ணது அப்படியே அவளுக்கு நடக்கும் நீ வேணா பாரு நாளைக்கு கண்டிப்பா நடக்கும்னு சொல்லி ஏதோ சமாளிச்சேன் அடுத்த நாள் இவன் கிட்ட எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே பாத்துக்கலாம் எதுவா இருந்தாலும் அடுத்து நான் எப்படி அவங்கள சந்திச்சேனு அடுத்த பார்ட்ல சொல்றேன்
உங்கள் கருத்துக்களை விருப்பம் இருந்தால் இதுல கொட்டலாம்.
நன்றி