கனவெல்லாம் நீதானே 3

Posted on

கனவெல்லாம் நீதானே 3
வணக்கம் கனவெல்லாம் நீ தானே மூன்றாவது பாகம் முதல் இரண்டு பாகம் படிக்காதவங்க உங்களுக்கு நேரம் இருந்தா படிச்சிட்டு இதை படிங்க ஏன்னா அதோட தொடர்ச்சி தான் இது படிச்சு புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் பண்ணலாமே ஒன்னும் தப்பு இல்லையே
[email protected]

கனவெல்லாம் நீதானே 2

நான் அனுப்புனா மெசேஜ்க்கு ரொம்ப நேரம் ஆகியும் ரிப்ளை வரவேயில்லை நானும் அப்பப்ப போன் எடுத்து பாத்துட்டு இருந்தேன் அப்பறம் கொஞ்ச நேரம் போனதுக்கு அப்பறம் மெசேஜ் வந்துச்சு ஆனாலும் உனக்கு ரொம்ப தான்டா னு ஒரு சிரிக்கிற மாதிரி இமேஜ் போட்டு மெசேஜ் அனுப்பிருந்தாங்க அப்பாடா நல்லவேல எங்க நம்ம மேல ஏதாவது தப்பா நெனச்சுருப்பாங்களோனு யோசிச்சேன் எங்க இவ்ளோ நேரம் ஆள் காணாம போய்ட்டிங்க என்ன ஆச்சுன்னு கேட்டேன் வீட்ல சமைக்க வேண்டாமா நேத்து தான குடிவந்தோம் எல்லாம் ஒதுக்கி வைக்கணும்ல நெறய வேல இருக்கும்லனு சொன்னாங்க சரி சரி அவர் எங்கன்னு கேட்டேன் அவர் எங்கயாவது வெளிய சுத்திட்டு இருப்பாரு இல்லனா வழக்கம் போல அவர் நண்பர்களோட கடைல போய் உக்காந்து வழக்கம் போல குடிக்க அரமிச்சிருப்பாருனு சொன்னாங்க சரி சரி விடுங்க எதுவும் யோசிக்காதீங்க நீங்க தனியா எல்லாம் ஒதுக்கிட்டு இருக்கீங்க கொஞ்ச நேரம் இருங்க நானும் வந்து உங்களுக்கு உதவி பன்றேன்னு சொன்னேன் உடனே அவங்க ஐயோ ராஜ் அதெல்லாம் வேணாம் நான் பாத்துக்கிறேன் உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு சொன்னாங்க

அட இதுல என்னங்க இருக்கு நீங்க சொல்லுங்க உடனே கூட லீவு போட்டு வந்துட்றேன்னு சொன்னேன் ஐயோ அதெல்லாம் ஒன்னும் வேணாம் அவர் வேற எப்ப வருவருனு தெரியாது அப்பறம் தேவையில்லாத பிரச்சனை பண்ணுவாரு நான் பாத்துக்கிறேன் நீங்க வேலை முடிச்சுட்டு பாத்து பத்திரமா வீட்டுக்கு வாங்கனு சொன்னாங்க சரி ஓகே கொஞ்சம் ஒர்க் இருக்கு முடிச்சிட்டு மெசேஜ் பன்றேன்னு சொன்னேன் அவங்களும் நானும் எனக்கும் வேல இருக்கு நானும் போய்ட்டு வேலைய பாக்றேன்னு சொன்னாங்க சரினு அப்படியே வேல ஓடிட்டு இருந்துச்சு எனக்கு அன்னிக்கு எனக்கு வேலையும் ரொம்ப அதிகமா இருந்துச்சு முடிக்கவே நைட் ஒன்பது மணி ஆகிடுச்சு அப்பறம் கெளம்பி ஒரு ஹோட்டல் போய்ட்டு சாப்டுட்டு இருந்தேன் அப்போ போன் எடுத்து அவங்க வாட்ஸாப்ப் லாஸ்ட் ஸீன் பாத்தேன் என் கூட பேசுனதுக்கு அப்பறம் அவங்க வாட்ஸாப்ப் பக்கமே வரல போல சரினு சாப்பிட்டு முடிச்சிட்டு கெளம்பி வீட்டுக்கு போய்ட்டு வண்டி விட்டுட்டு உள்ள போய் தூங்க தயார் ஆனேன் மறுபடியும் ஒரு பத்து நிமிஷத்துல சண்டை சத்தம் இந்த ஆளா தான் இருப்பான்னு வெளிய வந்து பாத்தேன் அந்த ஆள் குரல் தான் கேட்டுட்டு இருந்துச்சு

அவங்க வீடு ஜன்னல் தொறந்து இருந்துச்சு அந்த வழியா எட்டி பாத்தேன் உள்ள இவர் கத்திட்டு இருக்க யாமினி அவருக்கு எதிர்ல உக்காந்து தரையை பாத்துட்டே உக்காந்துட்டு இருந்தாங்க நான் அவருக்கு பின்னாடி இருக்கிற ஜன்னல் வழியா பாத்துட்டு இருந்ததால அவரால என்ன பாக்க முடியாது ஆனா யாமினியால முடியும் நான் கையாள செய்கை காட்டி யாமினிய என்ன பாக்க வச்சேன் அவரை பெட்ரூம் உள்ள போக வச்சு கதவை லாக் பண்ண சொன்னேன் என்ன பாத்து லேசா மெதுவா தலையை ஆட்டிட்டே ஒரு ரெண்டு நிமிஷம் அப்பறம் அவரை அந்த ரூம் உள்ள அனுப்பிட்டு கதவை லாக் பண்ணி ஒரு பெருமூச்சு விட்டாங்க அப்பறம் என்ன பாத்து லேசா சிரிச்சிட்டே அந்த ஜன்னல் பக்கத்தில வந்தாங்க ஏங்க விட்டா பால்காரன் மாதிரி ஆக்கிடுவீங்க போல ஜன்னல் வழியாவே பேசி அனுப்பிடுவீங்களோ வெளில வாங்கிங்கனு சிரிச்சிட்டே கூப்பிட்டேன் அவங்களும் அவங்க கண்ணுல இருந்த கண்ணீரை தொடைச்சுட்டே லேசா சிரிச்சிட்டே வெளிய வந்தாங்க நான் உடனே அவர் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரம் பொலம்பிட்டு அப்பறம் தான் தூங்குவாரு மொட்டை மாடிக்கு போய்டலாம் வாங்கனு கூப்பிட்டேன்

கொஞ்சம் யோசிச்சிட்டே வரதுக்கு யோசிச்சாங்க அட வாங்க நான் என்ன உங்கள கடிச்சா தின்னுட்டு போறேன்னு சொல்லி கூப்பிட்டேன் அவங்களும் மேல வந்தாங்க எங்க வீட்டை சுத்தி எப்பயும் நெறய மரம் இருக்கும் அதனால காத்துக்கு பஞ்சமே இருக்காது அதுவும் அப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி மழை பெஞ்சு நின்னதால நல்லா ஜில்லுனு காத்து அடிச்சிட்டு இருந்துச்சு உங்களுக்கு என்ன ஆசை யாமினினு கேட்டேன் என்ன திடீர்னு கேக்கறீங்கன்னு சொன்னாங்க சும்மா தான் தெரிஞ்சிக்கணும்னு தோணுச்சு அதன் கேட்டேன்னு சொன்னேன் எனக்கும் எல்லார் மாதிரியும் வாழ்க்கைல சந்தோசமா இருக்கனும்னு தான் ஆசை ஆனா நம்ம நெனைக்கிறது எதுவும் நடக்கிறதில்லயேனு சொன்னாங்க உடனே நான் விடுங்க நல்லதே எப்பயும் நடக்காது ஒரு சிலர் மூலமா தான் நடக்கும் சரி இப்ப ஒன்னு பண்ணலாம் அது கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்னேன் உடனே அவங்க என்ன அப்படினு கேட்டாங்க ஆனா நீங்க அதுக்கு ஏன் எதுக்குன்னு கேக்காம நான் சொல்றத நீங்க செஞ்சா மட்டும் போதும் யாரும் பாத்துடுவாங்களோனு எந்த நெனப்பு உங்களுக்குள்ள வர கூடாது நீங்க அனுபவிக்கிற அந்த நொடிய நீங்க என்ஜோய் பண்ணனும்னு சொன்னேன் அவங்க உடனே சந்தேகமா பாத்தாங்க ஐயோ தப்பா எதுவும் இல்லங்க நீங்க என்ன நம்பலாம்னு சொன்னேன் சரினு சொன்னாங்க

சரி அவர் எப்படியும் இதோட காலைல தான என்திரிப்பாருனு கேட்டேன் ஆமான்னு சொன்னாங்க என் கூட வாங்கனு சொல்லி கீழ கூட்டிட்டு போய் வீட்டுக்குள்ள நான் போய்ட்டு என் வண்டி சாவி எடுத்துட்டு வந்து சத்தம் இல்லாம என் வண்டிய வெளிய எடுத்து வச்சு வண்டி ஸ்டார்ட் பண்ணி அவங்கள என் பின்னாடி உக்கார சொன்னேன் அவங்க ஒத்த கால் போட்டு ஏறி உக்கார நான் இப்படி வேணாம் நீங்க ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்காருங்கனு சொன்னேன் அவங்களும் உடனே கீழ இறங்கி ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்காந்தாங்க என் வண்டிய எடுத்தேன் கொஞ்சம் கொஞ்சமா வண்டில வேகமா போக வண்டலூர்ல இருந்து பூந்தமல்லி பய்பாஸ் இருக்கும் அதுல கூட்டிட்டு போனேன் அந்த பக்கம் ராத்திரி நேரம் எந்த தொந்தரவும் இருக்காது எவ்ளோ வேகமாவும் போகலாம் அதனால அந்த ரோடு வந்ததும் நல்லா வண்டில வேகம் எடுத்து ஓட்ட அந்த நேரம் லேசான சாரல் மழையும் தூர கண்ணாடி வழியா அவங்க முகத்தை பாத்தேன் அவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் உடனே நான் யாமினினு கூப்பிட்டேன் இன்னிக்கு நாள் உங்களோடது இன்னியோட இந்த உலகம் அழிய போகுதுனு நெனச்சுக்கோங்க நல்லா என்ஜோய் பண்ணுங்கன்னு சொல்லி வண்டிய இன்னும் வேகமா ஓட்ட அவங்க ரெண்டு பக்கமும் கைய ரெக்கை மாதிரி விரிச்சு வச்சு அவங்க கண்களை இறுக்கி மூடி ஊஊ ஒஹ்ஹஹ்னு கத்த கூட சேந்து நானும் கத்த அவ்ளோ புடிச்சிருந்துச்சு அவங்களுக்கு அப்பறம் கொஞ்ச நேரம் அப்பறம் அங்க ஒரு டீ கடைல வண்டி நிறுத்தினேன் அங்க எப்பயுமே கடை நைட் முழுக்க இருக்கும் அங்க போய்ட்டு ஆளுக்கு ஒரு டீ குடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பும் போது இப்ப உங்க மனசுக்கு எப்படி இருக்குனு கேட்டேன் சத்தியமா இந்த மாதிரி ஒரு சந்தோசத்தை நான் அனுபவிச்சதே இல்ல ராஜ் இதெல்லாம் நான் நெனச்சு கூட பாத்ததில்லை சின்ன சின்ன விஷயத்துல கூட இவ்ளோ என்ஜோய் இருக்கும்னு இப்ப தான் தெரிஞ்சிக்குட்டேனு சொல்லும் போதே லேசா அவங்க கண்ணு கலங்க அட இதெல்லாம் ஒரு விஷயமா எப்ப பாத்தாலும் கண்ண கசக்கிக்கிட்டுனு சொல்லி சிரிச்சிட்டே கண்ண தொடைங்கனு வண்டி எடுத்தேன் எப்படி வீட்டுக்கு போலாமா இல்லனு கேட்டேன் இன்னும் ஒரு ரவுண்டு போலாமான்னு கேட்டாங்க எனக்கு பயங்கர சந்தோஷம் வாங்க அசத்துவோம்னு சொல்லி வண்டி எடுத்து அன்னிக்கு நைட் ரொம்ப நேரம் இதே மாதிரி ரவுண்டு அடிச்சிட்டே இருந்தோம் கடைசியா நைட் மூணு மணிக்கு மேல தான் வீட்டுக்கே போனோம் போகும் போது ரெண்டு பேருக்குமே வீட்டுக்குள்ள போக மனசே இல்ல அவங்க அவங்களோட வீட்டுக்குள்ள போறத பாத்து அதாவது என்ன விட்டுட்டு போறத பாத்து எனக்கு லேசா கண்ணு கலங்குச்சு உடனே அவங்க அத பாத்து இவ்ளோ நேரம் எனக்கு யாரோ புத்திமதி சொல்லிட்டு இப்ப அவங்களே கண்ணு கலங்குறாங்க போலன்னு கிண்டல் பண்ணாங்க

அட நீங்க வேற யாமினி அதெல்லாம் ஒன்னும் இல்லனு சோகமா சிரிச்சிட்டே சொல்ல சரி சரி புரியும் எங்களுக்கும் நாளைக்கு பேசிக்கலாம் பாத்து சீக்கிரம் வீட்டுக்கு போய்ட்டு தூங்குங்க நாளைக்கு ஆபீஸ் போணும்லனு சொல்லி என்ன அனுப்பி வச்சாங்க வீட்டுக்கு போய்ட்டு படுத்ததும் ஒரு மெசேஜ் வந்துச்சு இங்க இருந்து பீச் பக்கமானு கேட்டாங்க உடனே நான் பக்கமோ தூரமோ ஆசைபட்டுடீங்கள்ல நாளைக்கு நைட் நம்ம பீச் போறோம்னு சொன்னேன் உடனே டேய் னு அனுப்புனாங்க போறோம் யாமினி கண்டிப்பா போறோம்னு சீக்கிரம் தூங்குங்க அப்போ தான் இன்னும் நாளைக்கு முழிச்சிட்டு இருக்க முடியும்னு சொல்லி டக்குனு நான் ஆப்லைன் போய்ட்டேன் அடுத்த நாள் பீச் பிளான் அங்க என்ன நடந்துச்சு எங்களுக்குள்ள ஒரு நெருக்கம் ஆனதே அங்க தான் அது எப்படி நடந்துச்சுனு அடுத்த பார்ட்ல சொல்றேன்
ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க சீக்கிரம் முடிச்சிடறேன்
கதை புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் சொல்லுங்க சின்னதா முடிச்சிடறேன் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்குறேன்

[email protected]

819140cookie-checkகனவெல்லாம் நீதானே 3